கதவுகளும் பூட்டுகளும் - கோடை
கூண்டுகள் என்றாலும்
அவை கதவுகளோடே
உருவாக்கப்படுகின்றன
சாத்திய நொடியில்
பூட்டுவோர் மறந்தனர்
பூட்டுகளும் சாவியோடே
படைக்கப்பட்டதை
அவை நுழைவாயில்கள்தான்
என்றாலும் கூட
வெளியேற்றவும் செய்யும்
இந்த மதிலைச் சுற்றி
அகழிகளும் முதலைகளும் இல்லை
சாகச ஆசை கொண்டோர்
இப்போதே வெளியேறலாம்
மிஞ்சியோர்க்கு ஒரு செய்தி
இந்த மதிலுக்குள் இருக்கும்
சிறையில் அரசியல் கைதிகள் யாரும் இல்லை
ஆனால் அரசியல் உண்டு
பின்குறிப்பு:-
சாத்திய கதவுகள்
அனுமதிப்பதில்லை
ஒளியையும் வளியையும்
காதலையும்...
எழுத்து: கோடை
ஓவியம்: சாருமதி
இது பற்றி உங்கள் கருத்து?...